முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
சமீபகாலமாக சோசியல் மீடியாவின் ஆதிக்கம் பெருகிவிட்ட நிலையில் பல நடிகைகளும் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக சோசியல் மீடியாவில் தங்களைப் பற்றிய பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனாலும் பல எதிர்மறை எண்ணம் கொண்ட நெட்டிசன்கள் இவர்களது பதிவை உள்நோக்கத்துடன் விமர்சிப்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பதிலுக்கு இவர்களுடன் எந்த ஒரு நடிகையும் சரிக்கு சரி பதில் கொடுத்து மோதலில் ஈடுபடுவது இல்லை.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான அனேகன் படத்தில் கதாநாயகியாக நடித்த பாலிவுட் நடிகை அமைரா தஸ்தூர் இது போன்ற டிரோல்களை நிறைய சந்தித்தார். ஆனால் அதை எதிர்கொள்வதற்காக, பதிலடி தருவதற்காக இவர் புத்திசாலித்தனமாக சில மாற்று வழிகளை கையாண்டதாக சமீபத்தில் கூறியுள்ளார்.
அதாவது யாருக்கும் தெரியாமல் சில போலி கணக்குகளை சோசியல் மீடியாவில் உருவாக்கி அதன்மூலம் தன்னுடைய பதிவுகளில் முறையற்ற வகையில் விமர்சனம் செய்பவர்களுக்கு வேறு பெயரில் பதிலடி கொடுக்க துவங்கினாராம். ஆனால் இப்படி நான் செய்வது இதுவரை யாருக்குமே தெரியாது. ட்ரோல் செய்பவர்கள் செய்து கொண்டே போகட்டும் என அப்படியே விட்டுவிட முடியாது. அவர்கள் எல்லை மீறும்போது ஒரு கட்டத்தில் நாமும் அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டியதாக இருக்கிறது என்று கூறியுள்ளார் அமைரா தஸ்தூர்.