சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
பெல்காமை சேர்ந்தவர் ராய் லட்சுமி. மிஸ்.பெல்காம் அழகியாக வெற்றி பெற்றவர் 'கற்க கசடற' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு 'காஞ்சனாமாலா கேபிள் டிவி' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். 'ராக்அன் ரோல்' படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார், 'வால்மீகி' படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார். 'அகிரா' படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். எல்லா மொழிகளிலும் சேர்த்து 50 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக வலம்வர முடியவில்லை.
இப்போதும் சமூக வலைத்தளங்கள், வெளிநாட்டு பயணங்களில் பிசியாக இருக்கிறார். அவ்வப்போது பிகினி உடை அணிந்து தனது கவர்ச்சியான படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். தமிழில் கடைசியாக 3 வருடங்களுக்கு முன்பு 'சின்ட்ரெல்லா' என்ற படத்தில் நடித்தார். அண்ணாச்சி நடித்த 'தி லெஜண்ட்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். தற்போது தமிழ் படங்கள் எதுவும் கையில் இல்லை.
ராய் லட்சுமி சில தினங்களுக்கு முன்பு தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “என்னுடைய பிறந்தநாள் டன் கணக்கில் அன்பு, ஆசீர்வாதம் மற்றும் ஆச்சரியங்களுடன் தொடங்கியது. குறிப்பாக என் அன்புக்குரியவர்கள் இவ்வளவு அன்பைக் கொட்டியதற்கு மிக்க நன்றி, இந்த அதீத அன்புக்கு நான் என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் உண்மையிலேயே விசேஷமாக உணர்கிறேன். உலகம் முழுவதிலுமிருந்து வந்த அனைத்து வாழ்த்துக்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. என்னைச் சுற்றி இதுபோன்ற அற்புதமான குடும்பம், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் அன்பான மக்கள் இருப்பதில் நான் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. அனைவருக்கும் நன்றியும் அன்பும்” என்று எழுதியுள்ளார்.