22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
நடிகை திவ்யா ஸ்ரீதர், செவ்வந்தி சீரியலில் நடித்து வந்தார். அவருக்கு அண்மையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதன்காரணமாக சில நாட்கள் செவ்வந்தி தொடரில் திவ்யா ஸ்ரீதர் நடிக்கவில்லை. அவர் சீரியலை விட்டு விலகிவிட்டதாக பல வதந்திகள் கிளம்பியதால் ரசிகர்களும் வருத்தமடைந்தனர். இந்நிலையில், 2 மாதங்களுக்கு பிறகு தனது கைக்குழந்தையுடன் திவ்யா ஸ்ரீதர் செவ்வந்தி சீரியல் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். திவ்யா ஸ்ரீதர் தனது குழந்தையுடன் கெத்தாக காரில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து இறங்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, 'அம்மா செய்யாத வேலையோ, அவள் விரும்பாத பணியோ, முத்தமிடாத குழந்தையோ இல்லை. வேலைக்குச் செல்லும் அம்மா எல்லாவற்றையும் செய்கிறாள். மீண்டும் வேலைக்குச் செல்கிறேன்', எனப் பதிவிட்டுள்ளார். சோஷியல் மீடியாவில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், திவ்யா ஸ்ரீதருக்கு பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.