போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தெலுங்கில் கோபிசந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே லக்ஷ்யம் மற்றும் லோக்யம் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர். இதன்மூலம் ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்ற தயாராகிவிட்டனர். அதேசமயம் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் இந்தப்படத்தின் கதையை முதலில் கூறியது நடிகர் பாலகிருஷ்ணாவிடம் தானாம்..
ஆம். டிக்டேட்டர் மற்றும் சாக்ஷ்யம் என கடைசியாக அவர் இயக்கிய இரண்டு படங்களையும் பாலகிருஷ்ணாவை வைத்து தான் இயக்கியிருந்தார். அதனால் மூன்றாவதாக அவரையே வைத்து இயக்கும் முடிவில் இந்த கதையை அவரிடம் கூறினாராம். ஆனால் பாலகிருஷ்ணாவுக்கு இந்த கதை ரொம்பவே பிடித்திருந்தாலும் ஏற்கனவே கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு இந்தப்படத்தை ஆரம்பிக்கலாம் என கூறினாராம்.
அந்தசமயத்தில் ஏதேச்சையாக இந்த கதையை கோபிசந்த்திடம் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் சொல்ல, அவருக்கு பிடித்துப்போய் உடனே சம்மதம் சொல்லிவிட்டாராம்.