ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

யுடியூப் சேனல்களில் நடிகர் நடிகைகள் குறித்து நடிகர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட சிலர் ஆதாரம் இல்லாத அவதூறு செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில், ‛‛தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் நலனை பேணுவது, பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதும் எங்கள் தலையாய கடமை. எங்கள் உறுப்பினர்களான நடிகர்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும், அடிப்படை ஆதாரம் ஏதும் இன்றி பல தவறான பொய்யான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த சேகுவாரா என்ற புனைப்பெயர் கொண்ட ஜெய்சங்கர் என்பவர் மீது தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக சட்ட ரீதியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். அந்த வழக்கின் கடுமையை உணர்ந்து இனி எந்தவித அவதூறான செய்திகளையும் பதிவிட மாட்டேன் என்று குற்றம் சாட்டப்பட்டவர் உறுதிமொழி தந்து நீதிமன்றத்தில் ஒரு மனு சமர்ப்பித்தார். அதனை ஏற்ற நீதிமன்றம் அந்த உறுதி மொழியில் இருந்து அவர் தவறக் கூடாது என்ற கடுமையான உத்தரவின் அடிப்படையில் அந்த நபருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.
இதனைத்தொடர்ந்து சில காலம் அவதூறுகள் ஏதும் வெளிவராத நிலையில் சமீபகாலமாக மீண்டும் பயில்வான் ரங்கநாதன் என்னும் நபர் உட்பட பலரும் எங்கள் சங்கத்தின் பல உறுப்பினர்கள் மீது ஆதாரமற்ற அவதூறுகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இப்படி அவதூறு பரப்புபவர்கள் மேற்காணும் வழக்கை மனிதில் கொண்டு உடனடியாக அவர்களது சட்டவிரோத செயலை நிறுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அவதூறு பரப்பும் அனைவர் மீதும் கடந்த நபரை விட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தென்னிந்திய நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுக்கிறது. இனி ஒரு முறை எங்கள் உறுப்பினர்கள் தொடர்பான ஆபாசமான அவதூறான கருத்துக்களை பதிவேற்றம் செய்பவர்கள் தாமதமின்றி சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கம் அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.