ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பில் சென்னை நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை கருத்தரங்கை துவக்கி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதில் பேசும்போது "திரைப்படங்களில் குட்கா உள்ளிட்ட போதை பொருள்களின் தீங்கு பற்றிய விழிப்புணர்வு திரைப்படங்களில் இடம்பெற வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் திரைப்படங்களில் போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நடிகர்களை கொண்டு போதை பொருள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுவது என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் நாசர் விடுத்துள்ள அறிக்கையில் "முதல்வரின் கோரிக்கையை ஏற்பது எங்கள் கடமை. முதல்வரின் வேண்டுகோளை ஏற்று வருங்காலங்களில் குட்காவுக்கு எதிரான விழிப்புணர்வை அதிகரிக்கவும், முன்னணி நடிகர்களை வைத்து குட்கா போன்ற போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.