சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பில் சென்னை நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை கருத்தரங்கை துவக்கி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதில் பேசும்போது "திரைப்படங்களில் குட்கா உள்ளிட்ட போதை பொருள்களின் தீங்கு பற்றிய விழிப்புணர்வு திரைப்படங்களில் இடம்பெற வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் திரைப்படங்களில் போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நடிகர்களை கொண்டு போதை பொருள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுவது என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் நாசர் விடுத்துள்ள அறிக்கையில் "முதல்வரின் கோரிக்கையை ஏற்பது எங்கள் கடமை. முதல்வரின் வேண்டுகோளை ஏற்று வருங்காலங்களில் குட்காவுக்கு எதிரான விழிப்புணர்வை அதிகரிக்கவும், முன்னணி நடிகர்களை வைத்து குட்கா போன்ற போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.