‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் பாபு. அவர் மீது வளர்ந்து வரும் இளம் நடிகை ஒருவர் கொச்சி காவல் நிலையத்தில் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னை அவர் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதை தொடர்ந்த விஜய் பாபு தலைமறைவானார். அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து விஜய் பாபுவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. தான் குற்றவாளி அல்ல என நிரூபணமாகும் வரை நடிகர் சங்கத்தில் இருந்து விலகி இருப்பதாக கூறி விஜய் பாபு கடிதம் கொடுத்திருப்பதாகவும், அந்த கடிதத்தை ஏற்று கொள்வதாகவும் நடிகர் சங்க நிர்வாக குழு தெரிவித்தது.
இதற்கு நடிகைகள் ஸ்வேதா மேனன், மாலா பார்வதி உள்பட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விஜய் பாபுவை நடிகர் சங்கத்தில் இருந்து உடனே நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு மலையாள நடிகர் சங்கம் செவி சாய்க்கவில்லை.
இதைத்தொடர்ந்து நடிகர் சங்க புகார் கமிட்டியில் இருந்து ராஜினாமா செய்வதாக நடிகைகள் ஸ்வேதா மேனன், மாலா பார்வதி, குக்கு பரமேஸ்வரன் ஆகியோர் நடிகர் சங்கத்திற்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளனர். இது மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன் பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய நடிகர் திலீபை நீக்க வேண்டும் என்று நடிகைகள் குரல் எழுப்பிய பிறகு அவர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.