தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் |
விஜய் ஆண்டனி நடித்த 'மார்கன்' படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் சுசீந்திரன், யூ டியூப்பில் ரிவ்யூ சொல்பவர்களையும் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில், ''சமீபத்தில் வெளியான 'டி.என்.ஏ, மார்கன்' படங்களுக்கு ஆரம்பத்தில் நல்ல ரிவ்யூ வரவில்லை. ஆனால் நான் தியேட்டரில் சென்று பார்த்தபோது படம் நன்றாக இருந்தது. சில நாட்களில் படம் பிக்அப் ஆனது. இப்போது சில யூடியூப்பர்கள் தங்கள் வியூஸ், விளம்பர வருமானத்துக்காக தவறான ரிவ்யூ கொடுக்கிறார்கள். சினிமாவில் இருந்து கொண்டே சினிமாவை கொலை செய்கிறார்கள்.
இப்போது ஏகப்பட்ட டீம் வந்துவிட்டது. ஒரு டீம், சார் படத்துக்கு நாமே டிக்கெட் எடுத்து கொடுத்து 100 பேரை அனுப்புவோம். அவங்க வெளியே வரும் போது படம் ஆஹா ஓஹோ என்பார்கள் என ஐடியா கொடுக்கிறார்கள்.. மற்றொரு டீம், தங்களுக்கு வேண்டியதை வாங்கி கொண்டு, தங்களுக்கு வேண்டியவர்களை தியேட்டருக்கு அனுப்பிவிட்டு படத்தை பற்றி தவறாக சொல்ல சொல்கிறார்கள்'' என்றார்.
இப்போது யூ டியூப் விமர்சகர்கள் மீது தமிழ் சினிமாவில் கடும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. விமர்சனம் செய்ய கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் வழக்கு தொடுத்தது. ஆனால் கோர்ட் அந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டது. இதனால் போலியாக ஒரு படத்தை பற்றி ஆஹா ஓஹோ என சொல்லவோ, மட்டம் தட்டி பேசுவது போன்றோ விமர்சனம் செய்வோரை தடுக்க முடியாது, கட்டுப்படுத்தலாம் என சிலர் யோசனை தெரிவிக்கின்றனர்.