சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
''ஓ.டி.டி., தளம், இயக்குனர்களுக்கு புதிய களமாக மாறியுள்ளது'' என, திரைப்பட இயக்குனர் சுசீந்திரன் பேசினார்.
கோலிவுட் திரையுலகில் 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் 'ஜீவா' உள்ளிட்ட தரமான, வெற்றி படங்களை இயக்கியவர் சுசீந்திரன். பின்னர், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்து, மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர், கோவை தனியார் கல்லுாரியில் நடந்த, தென்மாநில அளவிலான 'பதிவுகள்' குறும்பட விழாவில் பங்கேற்றார்.
விழாவில் சுசீந்திரன் பேசுகையில், ''என்னுடைய முதல் குறும்படத்தை கடந்த, 2003ம் ஆண்டு இயக்கினேன். அந்த படத்தை திரையிட எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், இன்றைய மாணவர்கள் எடுக்கும் குறும்படங்களை திரையிட, பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கின்றன.
முதல் முறையாக எடுத்த படங்களை, பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன், என்னுடன் இணைந்து பலரும் உதவி இயக்குனர்களாக சினிமா பயணத்தை துவங்கினர். அதில், 30-50 பேர் தான், சினிமாவில் நிலைத்து நிற்கின்றனர்.
பல கஷ்டங்களை கடந்தால் தான், சினிமா துறையில் வெற்றி சாத்தியமாகும். இன்றைய உதவி இயக்குனர்கள், ஓ.டி.டி., தளத்தை பயன்படுத்தி, பல்வேறு வெற்றிகளை குவித்து வருகின்றனர். தினமும் தொழில்நுட்பம் மாறி வருகிறது. அதற்கேற்ப மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.