'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

சினிமாவில் பிரபலமாக இருக்கும் முன்னணி ஹீரோக்களின் ரசிகர்கள் நாளுக்கு நாள் தங்களது அபிமானத்தை வெளிப்படுத்துகிறேன் என்கிற பெயரில் செய்யும் செயல்கள் அதிர்ச்சி தருவதாகவும் முகம் சுளிக்க வைப்பதாகவும் இருக்கின்றன. சமீபத்தில் கூட நடிகர் பாலகிருஷ்ணா தன்னுடைய பட வெளியீட்டின் போது, கிடாய் வெட்டி பலியிட்டு ரத்த அபிஷேகம் செய்த ரசிகர்களை இனி அதுபோல் உயிர்பலி செய்யக்கூடாது என்று கூறி வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் மகேஷ்பாபுவின் ரசிகர் ஒருவர் திரையரங்கு முன்பாக சமீபத்தில் கட்டப்பட்டிருந்த 'வாரணாசி' படத்தின் மகேஷ்பாபு போஸ்டர் முன்பாக நின்றுகொண்டு ஒரு பாட்டிலை எடுத்து தனது தலையில் உடைத்து, தலையில் வழிந்த ரத்தத்தால் போஸ்டரில் மகேஷ் பாபுவின் நெற்றிக்கு ரத்தத் திலகம் வைக்கிறார். அதன்பிறகு அவருக்கு தீபாராதனையும் காட்டுகிறார்.
இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஹீரோக்கள் தங்களது ரசிகர்களுக்கு ரொம்பவே கண்டிப்பும் கறாருமாக உத்தரவு போட்டால் கூட இவர்களின் செயல்களை தடுக்க முடியுமா என்று தெரியவில்லை.




