'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் மே பத்தாம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரபல நடிகரான கிச்சா சுதீப் சில தினங்களுக்கு முன்பு கர்நாடக பாஜகவுக்கு ஆதரவாக தான் பிரச்சாரம் செய்ய போவதாக அறிவித்திருந்தார். இப்படியான நிலையில் தற்போது கர்நாடகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் இருந்து மும்பைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட 39 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்களை கர்நாடக போலீசார் பறிமுதல் செய்துள்ளார்கள். அதையடுத்து நடந்த விசாரணையின் போது அந்த கார் தயாரிப்பாளர் போனி கபூருக்கு சொந்தமானது என்பது தெரிவந்துள்ளது. அதையடுத்து அந்த வெள்ளி பொருட்களுக்கான உரிய ஆவணங்களை கொடுத்துவிட்டு எடுத்துச் செல்லுமாறு தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.