ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வலிமை படம் ஜனவரி 13-ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒமைக்கிறான் பரவல் காரணமாக திரையரங்குகளில் 50% பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு கட்டுப்பாடு விதித்திருக்கிறது. இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு போன்றவையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர், பிரபாஸின் ராதே ஷ்யாம் போன்ற படங்களின் ரிலீஸ் தேதிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அதனால் அஜித்தின் வலிமை பொங்கலுக்கு திட்டமிட்டபடி வெளியாகுமா? இல்லை ரிலீஸ் தேதியில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா என்ற செய்திகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் வலிமை படத்தை வெளியிடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. அதே சமயம் வேறு ஏதேனும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் மட்டுமே ரிலீசில் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் வலிமை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.