கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வலிமை படம் ஜனவரி 13-ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒமைக்கிறான் பரவல் காரணமாக திரையரங்குகளில் 50% பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு கட்டுப்பாடு விதித்திருக்கிறது. இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு போன்றவையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர், பிரபாஸின் ராதே ஷ்யாம் போன்ற படங்களின் ரிலீஸ் தேதிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அதனால் அஜித்தின் வலிமை பொங்கலுக்கு திட்டமிட்டபடி வெளியாகுமா? இல்லை ரிலீஸ் தேதியில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா என்ற செய்திகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் வலிமை படத்தை வெளியிடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. அதே சமயம் வேறு ஏதேனும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் மட்டுமே ரிலீசில் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் வலிமை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.