மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பிய ஐஸ்வர்யா ராய் | ஓய்வு பெற துடிக்கும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கும் சல்மான் கான் | என்னுடன் நடிக்க மறுத்தவர்கள் இப்போது என் படத்தை புரமோட் செய்கிறார்கள் ; கென் கருணாஸ் | மேடையில் நாற்காலி கவிழ்ந்து கீழே விழுந்த நாகசைதன்யா | ஒரே நாளில் பரபரப்பை ஏற்படுத்திய விஜய் - த்ரிஷா, ரவி மோகன் - கெனிஷா | வரலட்சுமி இயக்குனராக அறிமுகமாகும் 'எஸ் சரஸ்வதி' தெலுங்கில் மட்டும் ரிலீஸ் | விஜய் தேவரகொன்டா - ராஷ்மிகா வரவேற்பு: தமிழ், கன்னடம், ஹிந்தி திரையுலகினர் 'ஆப்சென்ட்' | தான் எழுதிய 'மைல்கல்' புத்தகத்தை ரஜினியிடம் பரிசாக கொடுத்த இயக்குனர் ஞானவேல் | ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் |

சோசியல் மீடியாவில் பிரபலங்களின் பெயரில் போலியாக கணக்குகள் துவக்கி அதன்மூலம் பணம் சம்பாதிக்கும் நபர்கள் அவ்வப்போது தங்கள் வேலையை காட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் மலையாள நடிகர் தினேஷ் பிரபாகர் தனது பெயரில் சோசியல் மீடியாவில் கணக்கு துவங்கப்பட்டு சினிமாவில் விளம்பர படங்களில் நடிப்பவர்களுக்கு வாய்ப்புகள் பெற்றுத் தரப்படும் என கூறி மோசடி நடப்பதாக ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
மலையாள திரை உலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து ஓரளவு பிரபலமான தினேஷ் பிரபாகர், கடந்த வருடம் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தில் வில்லனுக்கு உதவும் போலீஸ் அதிகாரியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்ல மாதவன் நடித்த ராக்கெட்ரி படத்திலும் மோசமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மட்டுமல்ல, மலையாளத்திலும் கூட இன்னும் அதிகமாக பிரபலமானார். இந்த நிலையில் தான் சினிமாவில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி தனது பெயரில் பண மோசடி நடப்பதாக கேள்விப்பட்டு, சினிமா ஆசையில் வாய்ப்பு தேடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பதிவு ஒன்றை இட்டுள்ளார் தினேஷ் பிரபாகர்.
அதில் தன் பெயரில் யாரோ ஒருவர் மோசடி கணக்கு துவங்கியுள்ளார் என்றும் சினிமா மற்றும் விளம்பர படங்களில் நடிக்க வைப்பதாக கூறி பணம் கேட்டால் தரவேண்டாம் என்றும் சம்பந்தப்பட்ட நபர் குறித்து காவல்துறையில் புகார் அளிக்குமாறு எச்சரிக்கை செய்துள்ளார். அப்படி யாரேனும் இதற்குமுன் பணம் கொடுத்திருந்தால் கூட சம்பந்தப்பட்ட நபரின் நம்பகத்தன்மையை சோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் தினேஷ் பிரபாகர்.




