'இந்தியன் 2' தீபாவளிக்கு வெளியிட திட்டம் | கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர் | 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது ? | இளையராஜாவை சந்தித்து நன்றி சொன்ன வெற்றிமாறன் | 'பத்து தல' வெற்றியைக் கொண்டாடிய படக்குழு | விடுதலை படக்குழுவினருக்கு தங்க நாணயம் தந்த வெற்றிமாறன் | பாலாவின் வணங்கான் அடுத்தகட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் துவங்குகிறது | முகேஷ் அம்பானி வீட்டு கலாச்சார நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் | பாரதிராஜா நடிப்பில் மனோஜ் இயக்கும் மார்கழி திங்கள் | 'பத்து தல'யை தடுமாற வைக்கும் 'விடுதலை' |
சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் நீண்ட நாளைக்கு பிறகு அவர் நடித்திருந்த ஒரு குடும்ப அம்சம் கொண்ட திரைப்படமாக வெளியானது. இந்த படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்திருந்தார் பிரபல தெலுங்கு குணச்சித்திர நடிகை ஜெயசுதா. படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக இவருக்கு தான் அதிக காட்சிகள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சேனல் ஒன்றில் பேட்டி அளித்த ஜெயசுதாவிடம் நீங்கள் ஏன் அஜித்துடன் இணைந்து நடிக்கவில்லை என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜெயசுதா, “அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு வலிமை படத்திலேயே வந்தது. அந்த படத்திற்காக ஒருநாள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டேன். ஆனால் அந்த சமயத்தில் கொரோனா அலை பரவல் காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டபோது கொரோனா வைரஸ் தொற்று குறித்து ஏற்பட்ட பயத்தால் அந்த படத்தில் நடிக்காமல் விலகி விட்டேன்” என்று கூறியுள்ளார். அஜித்தின் அம்மாவாக அவர் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தான் பின்னர் நடிகை சுமித்ரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.