100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' |

சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் நீண்ட நாளைக்கு பிறகு அவர் நடித்திருந்த ஒரு குடும்ப அம்சம் கொண்ட திரைப்படமாக வெளியானது. இந்த படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்திருந்தார் பிரபல தெலுங்கு குணச்சித்திர நடிகை ஜெயசுதா. படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக இவருக்கு தான் அதிக காட்சிகள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சேனல் ஒன்றில் பேட்டி அளித்த ஜெயசுதாவிடம் நீங்கள் ஏன் அஜித்துடன் இணைந்து நடிக்கவில்லை என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜெயசுதா, “அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு வலிமை படத்திலேயே வந்தது. அந்த படத்திற்காக ஒருநாள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டேன். ஆனால் அந்த சமயத்தில் கொரோனா அலை பரவல் காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டபோது கொரோனா வைரஸ் தொற்று குறித்து ஏற்பட்ட பயத்தால் அந்த படத்தில் நடிக்காமல் விலகி விட்டேன்” என்று கூறியுள்ளார். அஜித்தின் அம்மாவாக அவர் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தான் பின்னர் நடிகை சுமித்ரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




