ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் நீண்ட நாளைக்கு பிறகு அவர் நடித்திருந்த ஒரு குடும்ப அம்சம் கொண்ட திரைப்படமாக வெளியானது. இந்த படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்திருந்தார் பிரபல தெலுங்கு குணச்சித்திர நடிகை ஜெயசுதா. படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக இவருக்கு தான் அதிக காட்சிகள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சேனல் ஒன்றில் பேட்டி அளித்த ஜெயசுதாவிடம் நீங்கள் ஏன் அஜித்துடன் இணைந்து நடிக்கவில்லை என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜெயசுதா, “அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு வலிமை படத்திலேயே வந்தது. அந்த படத்திற்காக ஒருநாள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டேன். ஆனால் அந்த சமயத்தில் கொரோனா அலை பரவல் காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டபோது கொரோனா வைரஸ் தொற்று குறித்து ஏற்பட்ட பயத்தால் அந்த படத்தில் நடிக்காமல் விலகி விட்டேன்” என்று கூறியுள்ளார். அஜித்தின் அம்மாவாக அவர் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தான் பின்னர் நடிகை சுமித்ரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.