மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் பிரசன்னா - சினேகா ஆகிய இருவருக்குமிடையே அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்தபோது காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். சமீபகாலமாக பிரசன்னா வில்லன் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் நடித்து வரும் நிலையில், சினேகாவும் புதிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரசன்னாவும், சினேகாவும் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்கள். அது குறித்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.