பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

பாடலாசிரியர் சினேகன், நடிகை கன்னிகா தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். இந்த குழந்தைகளுக்கு நடிகர் கமல்ஹாசன் காதல் மற்றும் கவிதை என்று பெயர் சூட்டினார். அதன் பிறகு தங்களது குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டாலும், அவர்களின் முகத்தை காட்டாத சினேகன், கன்னிகா தம்பதியினர், தற்போது எக்ஸ் பக்கத்தில் தங்கள் இரண்டு குழந்தைகளின் முகத்தை காண்பித்து சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.
அதோடு, சினேகன் வெளியிட்டுள்ள பதிவில், 'எங்கள் அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கும் திரையுலக உறவுகளுக்கும் வணக்கம். எங்கள் இரட்டை மகள்கள் காதல் கன்னிகா சினேகன், கவிதை கன்னிகா சினேகன் இருவரையும் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு எங்கள் மகள்களையும் நேசிக்கட்டும். நன்றி என்றும் நட்புடன் சினேகன்' என்று அவர் ஒரு பதிவு போட்டுள்ளார்.