சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
சந்தானம் நடிப்பில் கடைசியாக 'டிடி நெக்ஸ்ட் லெவல்' என்ற படம் திரைக்கு வந்தது. அதையடுத்து சிம்புவின் 49வது படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சந்தானம். அதோடு, சிம்புவுக்காக மட்டுமே இந்த படத்தில் நடிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நேரத்தில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர்-2 படத்திலும் சந்தானத்தை காமெடி கலந்த ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே ரஜினி நடித்த 'எந்திரன், லிங்கா' போன்ற படங்களில் காமெடியனாக நடித்துள்ள சந்தானம், இந்த ஜெயிலர்-2 படத்தில் காமெடி கலந்த வேடத்தில் நடிக்க சம்மதிப்பாரா? மாட்டாரா? என்பது விரைவில் தெரியவரும்.