ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கிய ‛ஜெய்பீம்' படத்திற்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்பதுதான் திரையுலகினரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அந்த படத்துக்கு தேசிய விருது கிடைக்காதது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்திருப்பதாக பலரும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். குறிப்பாக தெலுங்கு நடிகர் நானி, ‛ஜெய் பீம்' படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஜெய் பீம் என்ற ஹேஷ்டாக் போட்டு மனசு உடைஞ்சது போன்ற இமோஜியை பதிவிட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவரை தொடர்ந்து தற்போது இயக்குனர் சுசீந்திரனும் அது குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், தேசிய விருது வென்ற படங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். கடைசி விவசாயி படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி. மிகவும் அற்புதமான படம். இயக்குனர் மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள். அதேபோல் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு கருவறை என்ற குறும்படத்தின் பின்னணி இசைக்காக தேசிய விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள். இந்த வரிசையில் ஜெய்பீம் படம் மிகவும் முக்கியமானது. ஆனால் இந்த படத்திற்கு விருது கிடைக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதற்கு ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.