கடந்த வாரம் ஒரு வாரிசு அறிமுகம், இந்த வாரம் மற்றொரு வாரிசு அறிமுகம் | கார்த்தி படத்தில் இணைந்த கல்யாணி | கடந்த 40 ஆண்டுகளாக பணத்தை மதிக்காமல் இருந்தேன் : நடிகர் சசிகுமார் | ''விஜய்சேதுபதி மகன் விஜய் மாதிரி வருவார்'': வனிதா விஜயகுமார் | ஒரே நாளில் மீட்கப்பட்ட உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் கணக்கு | 50 லட்சம் உதவி செய்வதாக பிரபாஸ் சொல்லவில்லை : காமெடி நடிகரின் குடும்பம் மறுப்பு | 77 லட்சம் மோசடி செய்ததாக நடிகை ஆலியா பட்டின் முன்னாள் பெண் உதவியாளர் கைது | 24 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலீில் ரீ ரீலீஸாகும் மோகன்லாலின் ராவண பிரபு | காமெடி நடிகர் கிங்காங் மகளின் திருமணம் நடைபெற்றது! | தனியார் பேருந்துகள் ஓடாத கேரளா வெளிநாடு போல இருக்கிறது : 2018 இயக்குனர் சர்ச்சை கருத்து |
சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கிய ‛ஜெய்பீம்' படத்திற்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்பதுதான் திரையுலகினரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அந்த படத்துக்கு தேசிய விருது கிடைக்காதது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்திருப்பதாக பலரும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். குறிப்பாக தெலுங்கு நடிகர் நானி, ‛ஜெய் பீம்' படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஜெய் பீம் என்ற ஹேஷ்டாக் போட்டு மனசு உடைஞ்சது போன்ற இமோஜியை பதிவிட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவரை தொடர்ந்து தற்போது இயக்குனர் சுசீந்திரனும் அது குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், தேசிய விருது வென்ற படங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். கடைசி விவசாயி படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி. மிகவும் அற்புதமான படம். இயக்குனர் மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள். அதேபோல் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு கருவறை என்ற குறும்படத்தின் பின்னணி இசைக்காக தேசிய விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள். இந்த வரிசையில் ஜெய்பீம் படம் மிகவும் முக்கியமானது. ஆனால் இந்த படத்திற்கு விருது கிடைக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதற்கு ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.