‛ஹிருதயபூர்வம்' படத்தில் கெஸ்ட் ரோலில் மீரா ஜாஸ்மின் ; சென்சார் மூலம் உடைந்த ரகசியம் | வேண்டுமென்றே போலீஸ் ஜீப்பில் ஏற்றினார்கள் ; சுரேஷ்கோபி மகன் திடுக் தகவல் | மலையாளத்தில் சாண்டி நடிகராக அறிமுகமாகும் முதல் படம் ஆக.,28ல் ரிலீஸ் | தயாரிப்பாளர் மட்டுமல்ல, இயக்குனரும் ஆனார் ரவிமோகன் | கஞ்சா கடத்தும் காட்டீஸ் : சீலாவதியாக நடிக்கும் அனுஷ்கா | அடுத்த படம் எது? அல்லாடும் டாப் ஹீரோக்கள் | டைட்டில் இல்லாமலேயே முடிந்த விமல் படம் | யானை நடிக்கும் புதிய படம் ‛அழகர் யானை' | ஏஐ தொழில்நுட்பம் சினிமா கலைஞர்களை அழித்துவிடும்: அனுராக் காஷ்யப் எச்சரிக்கை | தயாரிப்பு நிறுவனம் துவக்கம்: திருப்பதியில் கெனிஷாவுடன் ரவிமோகன் சாமி தரிசனம் |
சூர்யா தயாரித்து, நடித்த படம் 'ஜெய் பீம்'. த.செ.ஞானவேல் இயக்கிய இந்தப் படம் இருளர்களின் வாழ்க்கையை பற்றி பேசியது. போலீஸ் லாக் அப்பில் இறந்த இருளர் சமூக இளைஞனின் மனைவிக்கு நீதி பெற்றுத் தந்த ஒரு நீதிபதியின் கதையாக இது அமைந்தது.
இந்த படம் கடந்த 2021ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் குறவர் சமுதாயத்தை இழிவுபடுத்தி காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜெய்பீம் திரைப்படத்தை தயாரித்து, நடித்த சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறவர் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் புகாரில் முகாந்திரம் இல்லை என கூறி போலீசார் நடவடிக்கை எடுக்க மறுத்து விட்டனர்.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை எழும்பூர் கோர்ட்டில் குறவர் நல்வாழ்வு சங்கத்தின் நிர்வாகி முருகேசன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை எழும்பூர் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகேசன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. முருகேசனின் மனுவுக்கு சென்னை போலீஸ் கமிஷனர், நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.