பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' | பிளாஷ்பேக் : ரீமேக்கிலும் வெற்றி பெற்ற 'மார்க்கண்டேயா' | டொவினோ தாமஸ், கயாடு லோகரின் பள்ளிச்சட்டம்பி ரிலீஸ் தேதி அறிவிப்பு |

சூர்யா தயாரித்து, நடித்த படம் 'ஜெய் பீம்'. த.செ.ஞானவேல் இயக்கிய இந்தப் படம் இருளர்களின் வாழ்க்கையை பற்றி பேசியது. போலீஸ் லாக் அப்பில் இறந்த இருளர் சமூக இளைஞனின் மனைவிக்கு நீதி பெற்றுத் தந்த ஒரு நீதிபதியின் கதையாக இது அமைந்தது.
இந்த படம் கடந்த 2021ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் குறவர் சமுதாயத்தை இழிவுபடுத்தி காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜெய்பீம் திரைப்படத்தை தயாரித்து, நடித்த சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறவர் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் புகாரில் முகாந்திரம் இல்லை என கூறி போலீசார் நடவடிக்கை எடுக்க மறுத்து விட்டனர்.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை எழும்பூர் கோர்ட்டில் குறவர் நல்வாழ்வு சங்கத்தின் நிர்வாகி முருகேசன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை எழும்பூர் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகேசன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. முருகேசனின் மனுவுக்கு சென்னை போலீஸ் கமிஷனர், நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.




