அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா | நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி | 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு |

தெலுங்கு சினிமாவின் அதிரடி நாயகன் என்.டி.பாலகிருஷ்ணா, வெறும் கையால் ரயிலை நிறுத்துவது, இரண்டு கைகளில் இரண்டு கார்களை தூக்கி அடிப்பது, ஒரே நேரத்தில் பத்து பேரை பந்தாடுவது என இவரது பட ஆக்ஷன் காட்சிகள் பிரபலம். இதனை அவரது ரசிகர்கள் ரசித்தாலும் பொது வெளியில் பெரிதாக கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது அவர் நடித்து வரும் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதிலும் இவர் பத்து பேரை தலையில் தூக்கி வீசுவது மாதிரியான காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த படத்தை போயபதி ஸ்ரீனு இயக்கி உள்ளார். ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா, எம்.தேஜஸ்வினி நந்தமுரி தயாரித்துள்ளனர். இந்த படம் பான் இந்திய படமாக செப்டம்பர் 25ம் தேதியன்று வெளியாகிறது.
டீசரில் வெளியாகி உள்ள காட்சிகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து பாலகிருஷ்ணா கூறியிருப்பதாவது, ''ரசிகர்கள் அதிரடி படங்களின் மீது அலாதி பிரியம் கொண்டவர்கள். அவர்களை எளிதில் திருப்திபடுத்தவே முடியாது. எனது படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகுதியாக இருக்கிறது. எனவே தான் அவர்கள் விரும்பும்படியான காட்சிகள் இருக்கும் வகையில் பார்த்து கொள்கிறேன். லாஜிக் பற்றி எனக்கு கவலை இல்லை. ரசிகர்களின் மகிழ்ச்சி, அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதே என் கடமை. அதற்காக எந்த ரிஸ்க்கும் நான் எடுப்பேன்'' என்கிறார் பாலகிருஷ்ணா.