பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
மலையாள சீனியர் நடிகரான சுரேஷ்கோபி கடந்த 10 வருடங்களில் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு அரசியலில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு எம்பியாக வெற்றி பெற்று தற்போது மத்திய இணை அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். இதற்கிடையே, தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார் சுரேஷ்கோபி. அந்த வகையில் இவர் நடிப்பில் ஜேஎஸ்கே (ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா) என்கிற திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாக இருந்த நிலையில் படத்தின் டைட்டிலை மாற்றக் கூறி சென்சார் கெடுபிடி காட்டியதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இன்னொரு பக்கம் அவர் ஏற்கனவே நடித்து வந்த ஒத்தக் கொம்பன் திரைப்படம் கிட்டத்தட்ட பாதி படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. இந்த முறை கேரளாவில் கோட்டயம் அருகில் உள்ள பாலா என்கிற ஊரில் நடக்கும் கிராம திருவிழா காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. இதற்காக ஒரு திருவிழாவையே செயற்கையாக உருவாக்கி செட் போடப்பட்டுள்ளது.
இந்த விழாவில் ஜெயன்ட் வீல் ராட்டணம், மரணக் கிணற்றில் பைக் ஓட்டுதல் மற்றும் மிகப்பெரிய சர்ச் என ஒரு திருவிழாவில் இடம் பெறும் அனைத்து அம்சங்களும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளன. இன்று (ஜூன் 28) முதல் இங்கு படப்பிடிப்பு துவங்கியுள்ளது. வரும் ஜூலை 5ஆம் தேதி வரை இங்கே படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற இருக்கிறது. கிட்டத்தட்ட 3000 துணை நடிகர்கள் பங்கு பெற அவர்களுடன் இணைந்து சுரேஷ் இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்..