ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல மலையாள சின்னத்திரை நடிகை அம்பிலி தேவி. மலையாள தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி. பின்னர் சீரியல் ஹீரோயின் ஆனவர். 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்து முடித்திருக்கிறார். சுமதி ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்த விஸ்வதுளசி படத்தில் இளவயது நந்திதா தாஸாக நடித்தவர் அதை தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.
சினிமா ஒளிப்பாதிவாளர் லோவல் என்பவரை 2009ம் ஆண்டு திருமணம் செய்தார். பின்னர் 2018ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதற்கு அடுத்த ஆண்டே மலையாள சீரியல் நடிகர் ஆதித்யன் ஜெயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு அம்பிலி தேவி தனது இரண்டாவது கணவர் மீது புகார் அளித்தார். தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். தற்போது கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாவரா போலீஸ் நிலையத்தில் கணவர் ஆதித்யன் ஜெயன் மீது புகார் கொடுத்துள்ளார். குடும்ப வன்முறை தொடர்பான பிரிவில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆதித்யன் ஜெயனை கைது செய்தனர்.