கேளிக்கை வரி குறைப்பு: திரைத்துறையினர் மகிழ்ச்சி | தள்ளிப்போனது இளையராஜா பாராட்டு விழா | கமல் உடன் முத்தக்காட்சி பற்றி அபிராமி விளக்கம் | சிவனே உத்தரவிட்டு கண்ணப்பா படத்தை எடுத்ததாக உணர்கிறோம் : விஷ்ணு மஞ்சு | 10 வருட சிறந்த படங்களை அறிவித்த தெலுங்கானா அரசு | ராஜேஷ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி | 21 படம் நடித்தும் என்ன பலன்: விஷ்ணு விஷால் பீலிங் | கிஷன் தாஸின் புதிய படம் ஆரோமலே | பென்ஸ் படத்தில் இணைந்த சம்யுக்தா மேனன் | விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : ராதிகா ஆப்தே |
தெலுங்கில் கோபிசந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே லக்ஷ்யம் மற்றும் லோக்யம் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர். இதன்மூலம் ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்ற தயாராகிவிட்டனர். அதேசமயம் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் இந்தப்படத்தின் கதையை முதலில் கூறியது நடிகர் பாலகிருஷ்ணாவிடம் தானாம்..
ஆம். டிக்டேட்டர் மற்றும் சாக்ஷ்யம் என கடைசியாக அவர் இயக்கிய இரண்டு படங்களையும் பாலகிருஷ்ணாவை வைத்து தான் இயக்கியிருந்தார். அதனால் மூன்றாவதாக அவரையே வைத்து இயக்கும் முடிவில் இந்த கதையை அவரிடம் கூறினாராம். ஆனால் பாலகிருஷ்ணாவுக்கு இந்த கதை ரொம்பவே பிடித்திருந்தாலும் ஏற்கனவே கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு இந்தப்படத்தை ஆரம்பிக்கலாம் என கூறினாராம்.
அந்தசமயத்தில் ஏதேச்சையாக இந்த கதையை கோபிசந்த்திடம் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் சொல்ல, அவருக்கு பிடித்துப்போய் உடனே சம்மதம் சொல்லிவிட்டாராம்.