Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்னை சிரிக்கக் கூடாது என கண்டிஷன் போட்ட ஒரே படம் : ‛மாமன்னன்' சக்சஸ் மீட்டில் வடிவேலு பேச்சு

08 ஜூலை, 2023 - 07:20 IST
எழுத்தின் அளவு:
Vadivelu-speech-at-Maamannan-success-meet

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், லால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‛மாமன்னன்'. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் தற்போது வரை ரூ.50 கோடிக்கும் மேல் வசூலை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் வடிவேலு பேசியதாவது : ‛‛இவ்வளவு நாட்களாக ஒரு காமெடி நடிகனாக நடித்தேன். நாய்சேகர் ரிட்டன்ஸ், சந்திரமுகி 2 படங்களுக்கு பின் கமிட்டான படம் இந்த மாமன்னன். இந்த கதையை கேட்க சொல்லி மாரி செல்வராஜை அனுப்பி வைத்தார் உதயநிதி. ஒரு வரி கதையை மாரி சொன்னார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நடிப்பிற்கு நிறைய வாய்ப்பு இருந்தது. நகைச்சுவைக்கு வாய்ப்பில்லை. படம் முழுக்க முழுக்க சீரியஸான கதை. இந்த படத்திற்கு மாமன்னன் மாரி செல்வராஜ் தான். இந்த கதையை ஒப்புக் கொண்ட உதயநிதி மன்னாதி மன்னன்.

20 - 30 படம் பண்ண அனுபவத்தை மாரி செல்வராஜிடம் நான் பார்த்தேன். வாழ்க்கையில் பசி, பட்டினி எல்லாம் நான் பார்த்து வந்தவன். அதேமாதிரி தான் மாரி செல்வராஜூம்... அந்த வலியை எல்லாம் கடந்து வந்துள்ளார். அதனால் அவருடன் சுலபமாக என்னால் கனெக்ட் ஆக முடிந்தது. அவருடைய வலி உடன் மற்றவர்களின் வலியையும் சேர்த்ததால் அது அனைவருக்கும் பொருந்தியது.

என்னை சிரிக்கக் கூடாது என கண்டிஷன் போட்ட ஒரே படம் இது தான். எங்கேயும் சிரிக்க கூடாது என இயக்குனர் சொல்லிவிட்டார். அதனால் எனக்குள் ஒரு சவாலை நான் உருவாக்கி கொண்டேன். எந்த இடத்திலேயும் யாரையும் சிரிக்க வைத்து விடக்கூடாது என நான் போராடினேன்.

இந்த படத்தை பார்த்துவிட்டு இரவு 11மணிக்கு முதல்வர் போன் பண்ணி என்னை பாராட்டினார். ரஜினி, கமல் என பலரும் பாராட்டினார். இப்படி ஒரு அற்புதமான படத்தில் நான் நடித்துள்ளேன். இது என் வாழ்க்கையிலும் நடந்தது தான். இந்த படத்தில் நடிக்க பயந்து அந்த வாய்ப்பை இழக்க பார்த்தேன்.

இந்த படத்தில் நான் மட்டும் ஹீரோ கிடையாது. எல்லோரும் ஹீரோ தான். எல்லாவற்றுக்கும் மேல் மாரி செல்வராஜ் தான் முக்கியமான ஹீரோ. அவருடைய வயதுக்கு மீறிய படம் இது. இதற்கு ஒத்துழைப்பு தந்தது உதயநிதி மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம். இந்த மாதிரி ஒரு வெற்றி படத்தை கொடுத்த மக்களுக்கு ரொம்ப நன்றி சொல்கிறேன்.

இவ்வாறு வடிவேலு பேசினார்.

52 கோடி வசூல்
சக்சஸ் மீட்டில் பேசிய இந்த படத்தின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி, இந்த படம் வெளியாகி 9 நாட்களில் உலகளவில் ரூ. 52 கோடி வசூலித்துள்ளதாக நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அமைதியான மனநிலையில் சாய் பல்லவிஅமைதியான மனநிலையில் சாய் பல்லவி ஹிந்தியிலும் அறிமுகமாகப் போகும் சிவகார்த்திகேயன் ஹிந்தியிலும் அறிமுகமாகப் போகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in