இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்து வருபவர் சாய் பல்லவி. நிறைய படங்களில் நடிக்காமல் மிகவும் தேர்வு செய்து மட்டுமே நடித்து வருகிறார். கதாநாயகியாக அறிமுகமான இந்த எட்டு வருடங்களில் தமிழில் இதுவரையில், “தியா, மாரி 2, என்ஜிகே, கார்கி” என நான்கே படங்களில்தான் நடித்துள்ளார்.
இந்த வருடத்தில் சாய் பல்லவி நடித்து இதுவரையில் எந்த மொழியிலும் ஒரு படம் கூட வெளியாகவில்லை. தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. ஒரு ராணுவ வீரரின் தியாகக் கதைதான் இந்தப் படம் என்று சொல்லப்படுகிறது.
காஷ்மீரில் எடுத்த சில புகைப்படங்களைப் பகிர்ந்து “மனநிலை - அமைதி” என மட்டும் குறிப்பிட்டுள்ளார் சாய் பல்லவி.