'ஹிருதயபூர்வம்' முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாளவிகா மோகனன் | பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை-2 கைவிடப்பட்டதா? | திருப்பதி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பிரபுதேவா! | நடிகை ரகுல் ப்ரீத் சிங் கணவரின் வீட்டில் குடியேறும் ஷாருக்கான்! | 'குட் பேட் அக்லி' படத்தின் மையக்கரு இதுதான்! - ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | சித்தார்த் - கியாரா திருமணத்தால் பல நாட்கள் அழுதேன் ; கிச்சா சுதீப் மகள் புது தகவல் | சல்மான்கான் குடும்பத்தினருடன் 'சிக்கந்தர்' படம் பார்த்த ஏ.ஆர் முருகதாஸ் | 'மிராஜ்' படப்பிடிப்பை நிறைவு செய்தார் ஜீத்து ஜோசப் | மோகன்லால் அறிமுக காட்சியே ரஜினியை மனதில் வைத்து உருவாக்கியதுதான் ; பிரித்விராஜ் | 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வரும் மனிஷா ஜஷ்னானி |
தெலுங்குத் திரையுலகத்தில் தனித்த நடிகராக விளங்கியவர் மறைந்த என்டிஆர். தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஒன்றுபட்ட ஆந்திர முதல்வராகவும் இருந்து தெலுங்கு மக்களுக்காக பல நல்ல விஷயங்களைச் செய்துள்ளார். சென்னையில் செயல்பட்டு வந்த தெலுங்கு திரையுலகத்தை ஐதராபாத்திற்கு மாற்றியவர் என்டிஆர்.
பத்மவிபூஷன் விருது பெற்று டில்லியிலிருந்து ஐதராபாத் திரும்பிய நடிகர் சிரஞ்சீவி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “என்டிஆர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது கிடைத்தால் நான் மிகவும் மகிழ்வேன். அரசு ஆதரவுடன் அது விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்,” என்றார்.
மேலும், ஆந்திர சட்டசபைத் தேர்தலில் பித்தாபுரம் தொகுதியில் போட்டியிடும் தனது தம்பி பவன் கல்யாணுக்காக பிரச்சாரம் செய்யப் போவதில்லை என்றும் கூறினார். “எனது ஆதரவு எப்போதும் பவன் கல்யாணுக்கு உண்டு. எங்களது குடும்பம் அவரது அரசியல் வாழ்க்கையை எப்போதும் வாழ்த்தும்,” என்றும் தெரிவித்தார்.
தென்னிந்திய திரையுலகத்தைப் பொறுத்தவரை மறைந்த நடிகரும், முதல்வருமான எம்ஜிஆருக்கு மட்டுமே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.