ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

பருத்திவீரன் படம் மூலம் தேசிய விருது பெற்ற பிரியாமணி தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். 2017ல் திருமணம் செய்துகொண்ட பிறகு சில நாட்கள் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட இவர் மீண்டும் 2021 முதல் பிசியாக நடிக்க துவங்கியுள்ளார். அந்த வகையில் தெலுங்கில் விராட பருவம், கஸ்டடி ஹிந்தியில் ஜவான் ஆகிய படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்த பிரியாமணி கடந்த 2023ல் மலையாளத்தில் மோகன்லால்-ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான நேர் படத்தில் கூட நெகடிவ் சாயல் கொண்ட வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடந்த வருடம் ஹிந்தியில் ‛ஆர்ட்டிகிள் 70, மைதான்' என பிரியாமணி நடித்த படங்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்த வருடத்தில் அவரது முதல் படமாக மலையாளத்தில் அவர் கதாநாயகியாக நடித்துள்ள ‛ஆபிஸர் ஆன் டூட்டி' என்கிற படம் வரும் பிப்ரவரி 20ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜித்து அஷரப் என்பவர் இயக்கியுள்ளார். கதாநாயகனாக குஞ்சாக்கோ கோபன் நடித்துள்ளார். நகைக்கடை ஒன்றில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் ஒன்றின் பின்னணியில் உள்ள மர்மங்களை விசாரிக்கும் வகையில் ஒரு அதிரடி போலீஸ் திரைப்படமாக உருவாகியுள்ளது.




