கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபல எடிட்டராக வலம் வந்த மகேஷ் நாராயணன் கமலின் விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களுக்கு படத்தொகுப்பு செய்துள்ளார். பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன் இணைந்து நடித்த டேக் ஆப் திரைப்படம் மூலம் இயக்குனர் ஆக மாறினார். பிறகு தொடர்ந்து பஹத் பாசிலை வைத்து மாலிக், சி யூ சூன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
தமிழில் முதன்முறையாக கமல் நடிக்கும் படம் ஒன்றை இவர் இயக்கப் போவதாக கடந்த வருடமும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் மலையாளத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் 16 வருடங்களுக்குப் பிறகு மோகன்லால், மம்முட்டி இருவரும் இணைந்து நடிக்கும் படம் ஒன்றை தற்போது இயக்கி வருகிறார் மகேஷ் நாராயணன். இதில் அவரது முதல் பட கதாநாயகர்களான பஹத் பாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் இருவருமே முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் கூறும்போது, “தமிழில் நிச்சயமாக கமல் படம் மூலம் தான் என்ட்ரி கொடுப்பேன். ஆனால் அதன் உருவாக்கத்திற்கு இன்னும் கொஞ்சம் காலம் எடுக்கும். அந்த கதையை இப்போது நான் இயக்கி வரும் மோகன்லால், மம்முட்டி படத்திற்காக பயன்படுத்தவில்லை. இது முற்றிலும் நான் எழுதிய புதிய கதை. இந்த படத்தில் மோகன்லால் கெஸ்ட் ரோலில் நடிக்கவில்லை. படத்தில் முழு நீள கதாபாத்திரத்தில் தான் இருக்கிறார். அது மட்டுமல்ல, என் படத்தில் நடித்தவர்கள் என்பதால் பஹத் பாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் இருவரையும் ஏதோ கருவேப்பிலை போல பயன்படுத்த மாட்டேன். அவர்களுக்கும் இந்த படத்தில் வலுவான கதாபாத்திரங்கள் இருக்கின்றன” என்று கூறியுள்ளார்.