கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
தமிழில் ‛ஓ மை கடவுளே, டிராகன்' போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் அஸ்வத் மாரிமுத்து. இவர் அடுத்து இயக்கவுள்ள சிம்புவின் 51வது படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இருவரையும் திடீரென இவர் சந்தித்து பேசி உள்ளார்.
அதுதொடர்பான போட்டோக்களை சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ளார். அதோடு, "உண்மையாகவே நீங்கள் ஒரு ஐகான் மற்றும் ஒரு சிறந்த மனிதர். என் பணிக்கான அன்பு, அரவணைப்பு மற்றும் உங்களின் பாராட்டு அனைத்திற்கும் நன்றி அல்லு அர்ஜூன், இன்னும் நிறைய அர்த்தம் கொண்ட சந்திப்பாக அமைந்தது. இனிமையான நண்பராகவும், சிறந்த மனிதராகவும் இருப்பதற்கு நன்றி தேவி ஸ்ரீ பிரசாந்த்" என குறிப்பிட்டுள்ளார் அஸ்வத்.