ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

தமிழில் ‛ஓ மை கடவுளே, டிராகன்' போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் அஸ்வத் மாரிமுத்து. இவர் அடுத்து இயக்கவுள்ள சிம்புவின் 51வது படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இருவரையும் திடீரென இவர் சந்தித்து பேசி உள்ளார்.
அதுதொடர்பான போட்டோக்களை சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ளார். அதோடு, "உண்மையாகவே நீங்கள் ஒரு ஐகான் மற்றும் ஒரு சிறந்த மனிதர். என் பணிக்கான அன்பு, அரவணைப்பு மற்றும் உங்களின் பாராட்டு அனைத்திற்கும் நன்றி அல்லு அர்ஜூன், இன்னும் நிறைய அர்த்தம் கொண்ட சந்திப்பாக அமைந்தது. இனிமையான நண்பராகவும், சிறந்த மனிதராகவும் இருப்பதற்கு நன்றி தேவி ஸ்ரீ பிரசாந்த்" என குறிப்பிட்டுள்ளார் அஸ்வத்.