முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா | நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி | 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு | 'நீளிரா' பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் : 'எமகாதகி' புகழ் ரூபா |

தமிழில் ‛ஓ மை கடவுளே, டிராகன்' போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் அஸ்வத் மாரிமுத்து. இவர் அடுத்து இயக்கவுள்ள சிம்புவின் 51வது படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இருவரையும் திடீரென இவர் சந்தித்து பேசி உள்ளார்.
அதுதொடர்பான போட்டோக்களை சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ளார். அதோடு, "உண்மையாகவே நீங்கள் ஒரு ஐகான் மற்றும் ஒரு சிறந்த மனிதர். என் பணிக்கான அன்பு, அரவணைப்பு மற்றும் உங்களின் பாராட்டு அனைத்திற்கும் நன்றி அல்லு அர்ஜூன், இன்னும் நிறைய அர்த்தம் கொண்ட சந்திப்பாக அமைந்தது. இனிமையான நண்பராகவும், சிறந்த மனிதராகவும் இருப்பதற்கு நன்றி தேவி ஸ்ரீ பிரசாந்த்" என குறிப்பிட்டுள்ளார் அஸ்வத்.