Advertisement

சிறப்புச்செய்திகள்

கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு

09 செப், 2025 - 04:07 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Rais-appeal-to-Delhi-HC:-Restrain-people-from-using-my-name,-images
Advertisement


நடிகை ஐஸ்வர்யா ராயின் படத்தை பயன்படுத்தி, தங்கள் தயாரிப்பு பொருட்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்வது பல நிறுவனங்களின் உத்தியாக உள்ளது. இதற்கு அவரது ஒப்புதல் அவசியம். ஆனால், பல நிறுவனங்களும், இணைய தளங்களும், ஐஸ்வர்யா ராயிடம் எந்த அனுமதியும் பெறாமல், அவரது படத்தை பயன்படுத்தி விளம்பரம் செய்வது அதிகரித்துள்ளது.

இதனால் தன்னுடைய தனியுரிமை, விளம்பர உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று கோரி ஐஸ்வர்யா ராய், டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தன் அனுமதியின்றி தன் பெயர், படங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், தன் போலவே உருவத்துடன் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி ஆபாசமாக படங்கள் உருவாக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இப்படி செயற்கையாக உருவாக்கப்பட்ட படங்கள், ஆன்லைனில் பரவி வருவதாகவும், சிலர் அதை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

'தன் கட்சிக்காரரின் பெயர், படத்தை பயன்படுத்த யாருக்கும் உரிமையில்லை. யாரோ ஒருவரின் பாலியல் இச்சைக்காக தன் கட்சிக்காரரின் பெயர் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது' என்று அந்த மனுவில் அவரது வக்கீல் குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராய் படத்துடன் கூடிய வால் பேப்பர்களை விற்பனை செய்யும் இணைய தளங்கள், மனுவில் பட்டியலிடப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி வீடியோ தயார் செய்த யூடியூப் சேனல்களும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வழக்கை கேட்ட நீதிபதி தேஜஸ் கரியா, எதிர் மனுதாரர்களை எச்சரிக்கும் வகையில் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.

இந்த வழக்கு, அடுத்த கட்ட நடவடிக்கைக்காக நவ.,7ம் தேதி இணைப்பதிவாளர் முன்னிலையில் வர உள்ளது. ஜன.,15ம் தேதி முன் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர்'பாகுபலி' தயாரிப்பாளர்களை ... பிளாஷ்பேக்: ஆற்றல்மிகு திரைக்கலைஞர்களை அலைபோல் அறிமுகமாக்கிச் சென்ற “அலைகள் ஓய்வதில்லை” பிளாஷ்பேக்: ஆற்றல்மிகு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in