25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பார்த்திபன் | டிசம்பர் 12ல் அறிவித்த படங்கள் சிக்கலின்றி வெளியாகுமா ? | தீவிர கதை விவாதத்தில் படையப்பா 2ம் பாகம் : ரஜினிகாந்த் புதிய தகவல் | ஜனநாயகன் : வியாபாரத்தில் நீடிக்கும் தடுமாற்றம் ? | அதிசயம், ஆனால், உண்மை… : 'படையப்பா' ரீரிலீஸுக்கு ரஜினிகாந்த் பேட்டி | கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது |

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் பார்த்திபன். ஆனால் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் அவரது அண்ணனான பெரிய பழுவேட்டரையரான சரத்குமாருக்கு மனைவியாக ஜோடியாக நடித்திருந்தார். இருந்தாலும் ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடித்ததே மகிழ்ச்சி என அப்போது தனது திருப்தியை வெளிப்படுத்தினார் பார்த்திபன்.
அதேசமயம் கடந்த 25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு பார்த்திபனை தேடி வந்தது. ஆனால் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. இந்த தகவல் சமீபத்தில் மம்முட்டியை பாராட்டி பார்த்திபன் வெளியிட்ட எக்ஸ் பதிவின் மூலம் வெளியே தெரியவந்துள்ளது. அந்த படம் தான் 2000ல் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். பார்த்திபன் நடிக்க முடியாமல் போன கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் மம்முட்டி (அதில் மம்முட்டிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்தார்).
மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான களம் காவல் படத்தில் அவர் வில்லனாக நடித்ததை பாராட்டி தான் வெளியிட்ட பதிவில், எனக்கு மம்முட்டியை பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள பார்த்திபன், “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலேயே நான் நடித்திருக்க வேண்டிய பாத்திரத்தில் பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்து ஏதோ சில காரணத்தால், நான் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு மிகவும் மரியாதைக்குரிய மம்முட்டி நடித்தார். அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டபோது என் நலம் மனநிலையும்.. அதேபோல அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதும் என் பிரார்த்தனைக்கும் பதில் என நினைத்தேன்.. ஒரு முழுமையான ஹீரோவான அவர் (நிஜ வாழ்க்கையிலும் கூட) வில்லனாக நடித்தால் கொன்னு குழி பறிச்சுடுவாரு” என்று தன் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.