நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் பார்த்திபன். ஆனால் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் அவரது அண்ணனான பெரிய பழுவேட்டரையரான சரத்குமாருக்கு மனைவியாக ஜோடியாக நடித்திருந்தார். இருந்தாலும் ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடித்ததே மகிழ்ச்சி என அப்போது தனது திருப்தியை வெளிப்படுத்தினார் பார்த்திபன்.
அதேசமயம் கடந்த 25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு பார்த்திபனை தேடி வந்தது. ஆனால் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. இந்த தகவல் சமீபத்தில் மம்முட்டியை பாராட்டி பார்த்திபன் வெளியிட்ட எக்ஸ் பதிவின் மூலம் வெளியே தெரியவந்துள்ளது. அந்த படம் தான் 2000ல் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். பார்த்திபன் நடிக்க முடியாமல் போன கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் மம்முட்டி (அதில் மம்முட்டிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்தார்).
மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான களம் காவல் படத்தில் அவர் வில்லனாக நடித்ததை பாராட்டி தான் வெளியிட்ட பதிவில், எனக்கு மம்முட்டியை பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள பார்த்திபன், “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலேயே நான் நடித்திருக்க வேண்டிய பாத்திரத்தில் பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்து ஏதோ சில காரணத்தால், நான் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு மிகவும் மரியாதைக்குரிய மம்முட்டி நடித்தார். அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டபோது என் நலம் மனநிலையும்.. அதேபோல அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதும் என் பிரார்த்தனைக்கும் பதில் என நினைத்தேன்.. ஒரு முழுமையான ஹீரோவான அவர் (நிஜ வாழ்க்கையிலும் கூட) வில்லனாக நடித்தால் கொன்னு குழி பறிச்சுடுவாரு” என்று தன் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.