பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

மலையாளத்தில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரங்களில் வித்தியாசமான நடிப்பை வழங்கி பின்னர் கதையின் நாயகனாகவும் மாறியவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தெலுங்கில் 'தசரா' படத்தில் வில்லனாக நடித்த இவர் தமிழில் விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் ஒரு சிறிய வில்லன் வேடத்தில் நடித்து, பின்னர் படம் குறித்தும் விஜய் குறித்தும் விமர்சித்து சர்ச்சையில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இந்த நிலையில் தற்போது 'சூத்திர வாக்கியம்' என்கிற மலையாள படத்தில் நடித்து வருகிறார் ஷைன் டாம் சாக்கோ. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் மலப்புரம் அருகே உள்ள எடப்பால்-பொன்னானி சாலையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஷைன் டாம் சாக்கோ. காலை 10 மணி அளவில் அங்கே சாலையில் அவர் நிற்பது போன்று ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அந்த சமயம் அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் ஷைன் டாம் சாக்கோவை தூரத்தில் இருந்து பார்த்ததும் போலீசாரின் வாகன சோதனை தான் நடக்கிறதோ என்று எண்ணி சடன் பிரேக் போட்டு உள்ளார்.
மழையால் ஈரமாகியிருந்த சாலை என்பதால் சடன் பிரேக்கால் தடுமாறிய வாகனம், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இளைஞருக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக ஓடி வந்த ஷைன் டாம் சாக்கோ, அந்த வாலிபரை தூக்கிவிட்டு உதவியதுடன் அவரை அதே இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையிலும் தானே கொண்டு போய் சேர்த்தார். மறக்காமல் அந்த இளைஞருடன் செல்பியும் எடுத்துக் கொண்டார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




