என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புராவை சேர்ந்தவர் ஷோபிதா(வயது 30). இவர் கன்னட திரைஉலகில் அறிமுகமாகி ஜாக்பாட், அபார்ட்மெண்ட் டூ மர்டர், வந்தனா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜனப்பிரியா, பிரம்மகுண்டு சித்தப்பா, மங்களகௌரி, கோகிலே, பிரம்மகந்து, கிருஷ்ண ருக்மணி, மனேதேவா உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்து பிரபலம் அடைந்தார். பின்னர் அவர் டி.வி.க்களில் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வந்தார்.
கடந்த ஆண்டு சிவண்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் ஷோபிதா தனது கணவர் சிவண்ணாவுடன் ஐதராபாத்தில் குடியேறினார். நேற்று முன்தினம் அவர் தனது வீட்டில் சிரித்து மகிழ்ந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தான் வசித்து வந்த ஐதராபாத் வீட்டில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.