வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

மலையாளத்தில் சமீபத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் சூப்பர் உமன் கதையம்சத்துடன் 'லோகா சாப்டர் 1 ; சந்திரா' திரைப்படம் வெளியானது. தென்னிந்திய சினிமாவிலேயே ஒரு கதாநாயகி சூப்பர் உமன் கதையம்சத்துடன் நடித்த முதல் படமாகவும் அது மட்டுமல்ல கதாநாயகியை மையப்படுத்தி உருவாகி 100 கோடி வசூலை தொட்ட முதல் படம் என்கிற பெருமையையும் இந்த படம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் கல்யாணி பிரியதர்ஷன் கடந்த வருடம் பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ரொம்பவே ஆர்வம் காட்டுகிறார்.
இது குறித்து தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் நாக் அஸ்வினை புகழ்ந்து பேசி உள்ள கல்யாணி பிரியதர்ஷன், “நாகி (நாக் அஸ்வின்) நமது சினிமா துறையில் மிகவும் படைப்புத்திறமை வாய்ந்த சிலரில முக்கியமான ஒருவர்” என்று கூறியதுடன், “நாகி.. இந்த பேட்டியை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால் எனக்கு கல்கி படத்தில் ஒரு பாகமாக இருக்க வாய்ப்பு கிடைக்குமா ?” என்று சந்தடி சாக்கில் வாய்ப்பும் கேட்டுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.