துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! |

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் 'பேட்ட, மாஸ்டர்' என ரஜினி, விஜய் படங்களில் நடித்ததை தொடர்ந்து பிரபலமான நடிகையாக மாறினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்ரமுடன் இணைந்து 'தங்கலான்' படத்தில் நடித்திருந்த மாளவிகா மோகனன் சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'ஹிருதயபூர்வம்' படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் முதன் முறையாக கதாநாயகியாக அறிமுகமானது துல்கர் சல்மான் ஜோடியாக 'பட்டம் போலே' என்கிற திரைப்படத்தில் தான்.
பிரபல ஒளிப்பதிவாளர் கே யு மோகனன் என்பவரின் மகளாக இருந்தாலும் இந்த முதல் படத்திற்காக ஆடிஷன் செய்துதான் அவர் தேர்வு செய்யப்பட்டார். அப்படி அவரை உதவி ஆடிஷன் செய்தது நடிகர் மம்முட்டி தான் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.
இது குறித்து மம்முட்டி ஆடிஷன் செய்வது போன்று அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு மாளவிகா மோகனன் கூறும்போது, “என்னுடைய முதல் ஆடிசன் இதுதான். யாருக்காவது இப்படி ஒரு ஜாம்பவான் நடிகர் தனது ஆடிசனுக்கான புகைப்படத்தை எடுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்குமா ? ஆனால் எனக்கு நடந்தது. பட்டம் போலே படத்திற்கு கதாநாயகி வேண்டும் என தேடிய போது என்னை ஒரு படப்பிடிப்பு தளத்திற்கு வரவைத்து மம்முட்டி தான் புகைப்படம் எடுத்தார். அவர்தான் அந்த படத்தில் என்னை நடிப்பதற்கு ஓகே சொன்னார்” என்று கூறியுள்ளார்.