பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

மலையாள திரையுலகில் விருதுகளை குறிவைத்து படம் இயக்கும் ஒரு இயக்குனர் தான் சணல்குமார் சசிதரன். இவரது இயக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு முன் 'காயாட்டம்' என்கிற படத்தில் நடித்த மஞ்சு வாரியர். இந்த படத்தின் தயாரிப்பாளரும் மஞ்சு வாரியர் தான். ஆனால் இந்த படம் முடிவடைந்த பிறகு மஞ்சுவாரியருக்கும் சணல்குமார் சசிதரனுக்கும் இடையே சில காரணங்களால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் மஞ்சுவாரியர் மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறார், அவரை போன் மூலமாகவோ ஈமெயில் மூலமாகவோ தொடர்பு கொண்டால் எந்த பதிலும் இல்லை என தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பரபரப்பான பதிவை வெளியிட்டார் சணல்குமார் சசிதரன்.
ஆனால் தனக்கு குறுஞ்செய்திகள் மூலமாக தொல்லைகள் தருவதாகவும் சோசியல் மீடியா மூலமாக தன் மீது அவதூறு பரப்புவதாகவும் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் புகார் அளித்தார் மஞ்சு வாரியர். அதைத்தொடர்ந்து சணல்குமார் சசிதரன் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஆனால் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என கூறப்பட்ட அந்த சமயத்தில் சணல்குமார். வெளிநாட்டில் இருந்ததால் அவர் மீது காவல்துறையில் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் மும்பையில் இருந்து கேரளாவுக்கு விமானம் ஏறுவதற்காக வந்த சணல்குமார் சசிதரனை அங்கே சென்ற கேரள போலீசார் கைது செய்து கொச்சிக்கு அழைத்து வந்துள்ளனர்.
இது குறித்து சணல்குமார் சசிதரன் வெளியிட்டுள்ள பதிவில், “எந்த அடிப்படையில் நான் கேரளா வருகிறேன் என்று தெரிந்த பின்னரும் கூட கேரள போலீசார் மும்பை கிளம்பி வந்து என்னை கைது செய்து அழைத்துச் செல்கின்றனர் என்பது வினோதமாக இருக்கிறது. ஆரம்ப நாட்களில் இருந்து மஞ்சுவாரியரின் பாதுகாப்பு குறித்துதான் என்னுடைய கருத்துக்களை வெளியிட்டு வந்தேன். அது குறித்து எந்த ஒரு விசாரணையும் இன்னும் துவங்கப்படவில்லை. சட்டப்படி ஒரு பெண்ணை அவரது பாதுகாப்புக்காக ஒருவர் பின் தொடர்வது என்பது அவரை துன்புறுத்துவதாகாது. மஞ்சுவாரியரே ஒரு முறை என்னை தொடர்பு கொண்டு தானும் தனது மகளும் ஆபத்தில் இருப்பதாக போன் செய்து பேசிய ஆடியோ என்னிடம் ஆதாரமாக இருக்கிறது. அதையும் நான் சமர்ப்பித்து இருக்கிறேன். ஆனால் அதை ஒருபோதும் போலீசார் பரிசோதிக்கவே இல்லை” என்று கூறியுள்ளார் சணல்குமார் சசிதரன். தற்போது அவர் போலீஸ் விசாரணையில் இருக்கிறார். விசாரணை முடிந்த பிறகு அவர் மீது என்ன விதமான நடவடிக்கை எடுக்கப்படும் தெரியவரும்.