ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

மலையாளத்தில் நடிகர் நிவின்பாலி தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வந்தவர், யார் கண் பட்டதோ தெரியவில்லை கடந்த சில வருடங்களாகவே ஒரு ஹிட் படம் கொடுப்பதற்காக ரொம்பவே தடுமாறி வருகிறார். இந்த நிலையில் ராம் இயக்கத்தில் தமிழில் இவர் நடித்துள்ள ஏழு கடல் ஏழுமலை என்கிற படம் குறித்த எதிர்பார்ப்பு தமிழ், மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் அதிகமாகவே இருக்கிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக ராமச்சந்திரா பாஸ் அன் கோ என்கிற படத்தில் நடித்து வருகிறார் நிவின்பாலி. இது அவரது 42 வது படமாக உருவாகி வருகிறது.
இந்த படத்தின் டைட்டில் வித்தியாசமாக இருந்தாலும் கூட இதற்கு அடுத்ததாக நிவின்பாலியின் 44வது படத்தை இயக்க உள்ள இயக்குனரின் பெயர் தான் ரசிகர்களை அதைவிட ஆச்சரியப்படுத்தி உள்ளது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத அந்த படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குனரான 'ஆர்யன் ரமணி கிரிஜா வல்லபன்' என்பவர்தான். கிட்டத்தட்ட கமல் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் பட பாணியில் இருக்கிறது இவரது பெயர். இதற்கு முன்னதாக 'பர்ன் தி பேபி' என்கிற குறும்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.




