நயன்தாராவின் ‛மண்ணாங்கட்டி' படப்பிடிப்பு நிறைவு | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப் போகிறதா இந்தியன் 2? | தீபிகா படுகோனேவை பிரிகிறாரா ரன்வீர் சிங் : பாலிவுட்டில் பரபரப்பு | விஜய்யின் கோட் படத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்? | ராஜு மகாலிங்கத்தின் புதிய வீட்டிற்கு விசிட் அடித்த ரஜினி | சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் வைரல் கிளிக்ஸ் | பாலாவின் காதலா? டிஆர்பி கேமா? - குழம்பிய ரசிகர்கள் | முடிவுக்கு வரும் ‛அருவி' சீரியல் | போலி கணக்கு துவங்கி ட்ரோல்களை சமாளித்த அனேகன் பட நாயகி | மனைவியுடனான விவாகரத்து குறித்து மனம் திறந்த விஜய் யேசுதாஸ் |
தனியார் அமைப்பு ஒன்று தாதா சாகேப் பால்கேவின் பெயரால் ஆண்டு தோறும் விருது வழங்கி வருகிறது. அரசு சினிமாவின் உயரிய விருதாக தாதா சாகேப் பால்கே விருது வழங்கி வரும் நிலையில் தனியார் அமைப்பு ஒன்று அதே பெயரில் விருது வழங்குவது குறித்து சர்ச்சை ஒரு பக்கம் இருந்தாலும், இந்த விருது வழங்கும் விழா நேற்று நடந்தது.
இந்த விழாவில் 'ஜவான்' படத்தில் நடித்த ஷாருக்கான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த நடிகைக்கான விருது அந்த படத்தில் நடித்த நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது. அதேப்போல் இப்பட இசையமைப்பாளர் அனிருத்திற்கு சிறந்த இசைக்கான விருது வழங்கப்பட்டது.
ஷாரூக்கான் பேசும்போது "நான் சிறந்த நடிகர் விருதுக்கு தகுதியானவன் என என்னை கருதியதற்காக நடுவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். விருதுகளை விரும்புபவன் நான். அதன்மேல் எனக்கு சிறிதளவு பேராசையும் உண்டு" என்றார்.
நயன்தாராவுக்கு வழங்கப்பட்ட விருதுகள் குறித்தும் விமர்சனங்கள் வரத் தொடங்கி உள்ளது.