பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

முன்னணி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் அனிதா சம்பத். அவருக்கென்று தனி ரசிகர் வட்டம் இருந்தது. இதை உணர்ந்த அந்த சேனல் அவரை சீரியலில் நடிக்க கேட்டது. ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார். ஆனாலும் சில படங்களில் செய்தியாளராக நடித்தார்.
இடையில் என்ன நடந்தது என்று தெரிவில்லை. திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தார். பிக்பாஸ் இல்லத்தில் 84 நாட்கள் வரை இருந்த அனிதா பின்னர் வெளியேறினார். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சில்லுனு ஒரு காதல் தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். தொடர்ந்து தனக்கான முக்கியத்துவம் இருக்கும் கேரக்டரில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது புதிய தொடர் ஒன்றில் டைட்டில் கேரக்டரில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்.




