ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாணியில் உருவாகியுள்ள நரிவேட்டை | தொடரும் படம் பார்க்க வந்த ரசிகர்களிடம் வீடியோ காலில் உரையாடிய மோகன்லால் | ஐஸ்வர்யா ராய் என்னை சிறுவனாக நினைத்ததில்லை : ரன்பீர் கபூர் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் நட்புக்காக நடனமாடும் ஸ்ருதிஹாசன் | சேப்பாக்கத்தில் சென்னை மேட்ச் பார்த்து ரசித்த அஜித், சிவகார்த்திகேயன் | தமிழ் சினிமாவில் சிக்ஸ்பேக் சண்டை | பிளாஷ்பேக்: இளையராஜா முடிவு செய்த கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக் : தமிழில் வெளியான முதல் கன்னடப் படம் | சசிகுமார் ஜோடியாக நடித்தது ஏன்? : சிம்ரன் விளக்கம் | காஷ்மீரில் அமைதியை கெடுப்பவர்களுக்கு கடும் தண்டனை : ரஜினி வேண்டுகோள் |
முன்னணி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் அனிதா சம்பத். அவருக்கென்று தனி ரசிகர் வட்டம் இருந்தது. இதை உணர்ந்த அந்த சேனல் அவரை சீரியலில் நடிக்க கேட்டது. ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார். ஆனாலும் சில படங்களில் செய்தியாளராக நடித்தார்.
இடையில் என்ன நடந்தது என்று தெரிவில்லை. திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தார். பிக்பாஸ் இல்லத்தில் 84 நாட்கள் வரை இருந்த அனிதா பின்னர் வெளியேறினார். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சில்லுனு ஒரு காதல் தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். தொடர்ந்து தனக்கான முக்கியத்துவம் இருக்கும் கேரக்டரில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது புதிய தொடர் ஒன்றில் டைட்டில் கேரக்டரில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்.