தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் | கல்லூரிக்கு கவர்ச்சி ஆடையில் வந்ததாக சர்ச்சை : ஆபாசம் என் உடையில் இல்லை என்கிறார் அமலாபால் |
கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் அபி டெய்லர். இதில் ரேஷ்மா முரளிதரன் அபி டெய்லராக நடிக்கிறார். அசோக் ஹீரோவாக நடிக்கிறார். ஆடை வடிமைக்கும் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்திற்கும், சாதாரண டெய்லருக்கும் இடையில் நடக்கும் மோதல்தான் கதை.
அபியின் குடிப்பழக்கத்திற்கு அடிமையான தந்தையாக படவா கோபி நடிக்கிறார். தங்கையாக ஜெயஸ்ரீ நடிக்கிறார். பஷீர் இயக்குகிறார். தொடர் பற்றி அவர் கூறியதாவது: அபி டெய்லர் என்பது எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானதாகும். தைரியத்துடனும், திடமனதுடனும் ஒரு கார்ப்பரேட் நிறுவன பெருமுதலாளியை துணிவுடன் எதிர்கொள்கின்ற அபி என்ற ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கைப் பயணம்தான் கதை.
அபியும் மற்றும் அவளது கதையும் பல இளம் பெண் தொழில்முனைவோர்களுக்கு உத்வேகமளிக்கும் என்று நம்புகிறேன். இந்த கதாபாத்திரத்தோடு ஒரு சகோதரிபோல் இணைகின்ற உணர்வு அவர்களுக்கு நிச்சயம் ஏற்படும் என்றும் நான் கருதுகிறேன். என்றார்.
இந்த தொடர் இன்று முதல் (ஜூலை 19) முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.