ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி 2 தொடரில் இதுவரை சந்தியாவுக்கு ஆதரவாக இருந்த அவரது கணவர் சரவணன், தற்போது சந்தியாவை வெறுத்து ஒதுக்க தொடங்கிவுள்ளார்.
சரவணன் தன்னிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று புரியாத சந்தியா கடைக்கு சென்று அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். ஆனால், சந்தியாவை கடைசி வரை கண்டுகொள்ளாத சரவணன் கஸ்டமர்களை கவனிக்கிறார். அப்போது கடைக்கு கல்யாண பத்திரிக்கை கொடுக்க வந்த நண்பர் படித்த பெண்ண திருமணம் செய்தால் பிரச்னை. நம்மை மதிக்கமாட்டார்கள். அதனால் நாம் சந்தோஷமாக வாழ முடியாது என்று கூற அதை சரவணனும் ஒத்துக்கொள்கிறார். இதைக்கேட்ட சந்தியா அதிர்ச்சியுடன் வீடு திரும்புகிறார்.
அதன்பின் வீட்டிற்கு வரும் சரவணன் சந்தியாவையும் இனிமேல் சாப்பாட்டு கொண்டு வர வேண்டாம் என்று சொல்கிறார். இருவருக்குமிடையே ஏற்பட்டுள்ள விரிசலுக்கு காரணம் புரியாமல் தவிக்கும் சந்தியா, சரவணனை எப்படி சமாதான செய்யப் போகிறார் என்ற கேள்வியுடன் இன்றைய எபிசோடு தொடர்கிறது.




