50வது நாளில் 'யூத்' | ‛மிஸ்டர் எக்ஸ்' பட இயக்குனருடன் இணையும் விக்ரம் | மீண்டும் விளையாட்டு படத்தில் சிவகார்த்திகேயன், தமிழரசன் பச்சமுத்து | ‛சிந்து பைரவி, முகவரி' மாதிரி ‛சைக்கிள் கேப்' | கருப்பு டிரைலர் எப்ப? அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி | கதையின் நாயகன் ஆன ‛மாமன்' இயக்குனர் | கதைநாயகனாகவும் நடிக்கிறேன், காமெடியனாகவும் வருகிறேன் : அப்புக்குட்டி | ஆர்.பி.சவுத்ரிக்கு இரங்கல், விஜய்க்கு ஆதரவு : சரி, கமல் எங்கே? | 25வது நாளில் 66 கோடி வசூலித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'மோனிகா' பாடல் |

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி 2 தொடரில் இதுவரை சந்தியாவுக்கு ஆதரவாக இருந்த அவரது கணவர் சரவணன், தற்போது சந்தியாவை வெறுத்து ஒதுக்க தொடங்கிவுள்ளார்.
சரவணன் தன்னிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று புரியாத சந்தியா கடைக்கு சென்று அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். ஆனால், சந்தியாவை கடைசி வரை கண்டுகொள்ளாத சரவணன் கஸ்டமர்களை கவனிக்கிறார். அப்போது கடைக்கு கல்யாண பத்திரிக்கை கொடுக்க வந்த நண்பர் படித்த பெண்ண திருமணம் செய்தால் பிரச்னை. நம்மை மதிக்கமாட்டார்கள். அதனால் நாம் சந்தோஷமாக வாழ முடியாது என்று கூற அதை சரவணனும் ஒத்துக்கொள்கிறார். இதைக்கேட்ட சந்தியா அதிர்ச்சியுடன் வீடு திரும்புகிறார்.
அதன்பின் வீட்டிற்கு வரும் சரவணன் சந்தியாவையும் இனிமேல் சாப்பாட்டு கொண்டு வர வேண்டாம் என்று சொல்கிறார். இருவருக்குமிடையே ஏற்பட்டுள்ள விரிசலுக்கு காரணம் புரியாமல் தவிக்கும் சந்தியா, சரவணனை எப்படி சமாதான செய்யப் போகிறார் என்ற கேள்வியுடன் இன்றைய எபிசோடு தொடர்கிறது.