ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சினிமா துறையில் கால்பதித்த லாவண்யாவுக்கு இது வெள்ளி விழா ஆண்டு. ஆந்திராவைச் சேர்ந்த லாவண்யா, எங்க மாமா என்ற தெலுங்கு படத்தில் 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன்பிறகு தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
படையப்பா, வில்லன், தெனாலி உள்பட பல படங்களிலும் நடித்தார். ஹீரோயின் தோழி, ஹீரோவின் தங்கை கேரக்டர்களில் நடித்த லாவண்யா. சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்தார். சின்னத்திரைக்கு வந்த லாவண்யா இங்கும் ஏராளமான சீரியல்களில் நடித்தார். கடைசியாக அவர் நடித்த சீரியல் ரோமாபுரி பாண்டியன்.
தற்போது சின்னத்திரை சீரியல்களுக்கு பிரேக் விட்டிருக்கிறார். சீரியல்களால் பல சினிமா வாய்ப்புகள் தவறியதால் இந்த முடிவாம். தற்போது ஆறாம் திணை என்ற படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கும் லாவண்யா, தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். ஆறாம் திணை படம் அதற்கு ஒரு திருப்பத்தை தரும் என்று நம்புகிறார். லாவண்யா விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருக்கிறார்.