ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
வெள்ளித்திரையில் ஜொலித்த குஷ்பு, சின்னத்திரையிலும் முத்திரை பதித்துவிட்டார். கல்கி, ருத்ரா போன்ற தொடர்களில் நடித்து வெற்றி பெற்ற குஷ்பு, அடுத்தபடியாக "பார்த்த ஞாபம் இல்லையோ" என்ற தொடரில் நடித்து வருவதுடன், தனது அவினி டெலிமீடியா சார்பில் தயாரித்தும் வருகிறார். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் இடை வெளிக்குப் பிறகு, மீண்டும் சின்னத்திரையில் களம் இறங்கியிருக்கும் குஷ்பு இம்முறை வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார்.
ஒரு பெரிய குடும்பத்தில் மருமகளாக நுழையும் குஷ்பு, அந்த குடும்பமே கொண்டாடுகிறது. ஆனால்... புகுந்த வீட்டை செழிக்க வைக்க வேண்டிய மருமகள், அதற்கு மாறாக அழிக்கத் தொடங்குகிறாள். அது ஏன்...? என்பது தான் கதையின் களம். இந்த தொடரில் குஷ்புவுடன் சீனு, டெல்லி குமார், பானுமதி, ஷோபனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கதை, கிரியேட்டிவ் ஹெட்: குஷ்பு சுந்தர், இயக்கம்: என்.பிரியன்.
இந்த புதிய தொடர் கலைஞர் டி.வி.யில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.