காதலாகி, கசிந்துருகி… பிரிவாகி… - தமிழ் சினிமா பிரபலங்களின் பிரிவுகள் | யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ்? | ஜூன் 1ல் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா | மே. 24ல் வெளியாகும் பி.டி. சார் | 'கில்லி' - 25 நாளில் இத்தனை கோடி வசூலா ? | இரண்டே நாளில் அஜித்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? | கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குகிறேனா? - நடிகர் பாலா அதிரடி பதில் | சூர்யா படத்தில் ஹாலிவுட் பைட் மாஸ்டர் | தெலங்கானாவில் 10 நாட்களுக்கு தியேட்டர்களை மூட முடிவு | சைந்தவி உடனான பிரிவை வைத்து விவாதம் : தமிழர் மாண்பு குறைந்து விட்டதா என ஜிவி பிரகாஷ் ஆதங்கம் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆமிர்கான். சில அற்புதமான ஹிந்தித் திரைப்படங்களையும் தயாரித்தவர். சமீபத்தில் பிரபல ஷோவான கபில் சர்மா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இயக்குனர் ஏஆர் முருகதாஸைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்.
“ஏஆர் முருகதாஸ் வித்தியாசமான ஒரு மனிதர். எந்த ஒரு ஒளிவுமறைவும் அவரிடம் கிடையாது. ஒரு காட்சி பற்றி அவரிடம் நாம் ஒரு ஆலோசனை சொன்னால் அது பற்றிய அவரது கருத்தை வெளிப்படையாகச் சொல்லிவிடுவார். அது நன்றாக இல்லை என்றால், சார் நன்றாக இல்லை என எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்வார். அதேசமயம் அந்த ஐடியா சிறப்பாக இருந்தால் சூப்பர் சார், சூப்பர் சார் என்பார். அதிலும் எந்தவித ஒளிவுமறைவும் இருக்காது. இப்படிப்பட்ட நல்ல குணத்தை அவரிடம் இருந்து நான் எடுத்துக் கொண்டேன்,” என்றார்.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஆமிர்கான் நடிப்பில் வெளிவந்த 'கஜினி' படம்தான் ஹிந்தித் திரையுலகத்தின் முதல் 100 கோடி படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க தமிழில் ஒரு படத்தையும், சல்மான்கான் நடிக்க ஹிந்தியில் ஒரு படத்தையும் இயக்கி வருகிறார் ஏஆர் முருகதாஸ்.