விடியற்காலையில் நடந்த அகில் அக்கினேனி திருமணம் | தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் |
ஒரு காலத்தில் இந்திய கால்பந்து அணி சிறந்த அணிகளில் ஒன்றாக விளங்கியது. 1952 முதல் 1962 வரையில் அந்த அணிக்கு கோச் ஆகப் பணிபுரிந்தவர் சையத் அப்துல் ரகீம். அவரது பயோபிக் படமாக 'மைதான்' படம் கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளிவந்தது.
அமித் ஷர்மா இயக்கத்தில், அஜய் தேவ்கன், பிரியாமணி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக போனி கபூர் இப்படம் ஏன் தோல்வியடைந்தது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
“நாங்கள் தேர்வு செய்த கதை சிறப்பான ஒன்று. அஜய் தேவ்கன் மிகவும் சிறப்பாகவே நடித்திருந்தார். ஆனால், ரசிகர்கள் என்ன மாதிரியான படத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை கணிக்கத் தவறிவிட்டோம். இப்போதெல்லாம் 'ஆர்ஆர்ஆர், ஜவான், பதான்” போன்ற படங்களையே ரசிகர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
கமர்ஷியல் படங்கள் நல்ல படங்களின் வருகையைக் கூட தடுமாற வைத்துவிடுகிறது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். சுமார் 200 கோடி ரூபாய் செலவில் தயாரான 'மைதான்' படம் 50 கோடி மட்டுமே வசூலித்துள்ளது என்கிறார்கள்.