‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
ஒரு காலத்தில் இந்திய கால்பந்து அணி சிறந்த அணிகளில் ஒன்றாக விளங்கியது. 1952 முதல் 1962 வரையில் அந்த அணிக்கு கோச் ஆகப் பணிபுரிந்தவர் சையத் அப்துல் ரகீம். அவரது பயோபிக் படமாக 'மைதான்' படம் கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளிவந்தது.
அமித் ஷர்மா இயக்கத்தில், அஜய் தேவ்கன், பிரியாமணி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக போனி கபூர் இப்படம் ஏன் தோல்வியடைந்தது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
“நாங்கள் தேர்வு செய்த கதை சிறப்பான ஒன்று. அஜய் தேவ்கன் மிகவும் சிறப்பாகவே நடித்திருந்தார். ஆனால், ரசிகர்கள் என்ன மாதிரியான படத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை கணிக்கத் தவறிவிட்டோம். இப்போதெல்லாம் 'ஆர்ஆர்ஆர், ஜவான், பதான்” போன்ற படங்களையே ரசிகர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
கமர்ஷியல் படங்கள் நல்ல படங்களின் வருகையைக் கூட தடுமாற வைத்துவிடுகிறது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். சுமார் 200 கோடி ரூபாய் செலவில் தயாரான 'மைதான்' படம் 50 கோடி மட்டுமே வசூலித்துள்ளது என்கிறார்கள்.