'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. திரைப்படங்களிலும் நடித்து வரும் அவர் ஏழைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். இந்த நிலையில் ஆண்டிபட்டியில் நடைபெற்ற ஒரு கல்லூரி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பாலா, பல முன்னணி நடிகர்கள் குரலில் மிமிக்ரி பேசியதோடு, பாடலுக்கு நடனமாடியும் மாணவ மாணவிகளை மகிழ்ச்சி படுத்தியிருக்கிறார்.
அதையடுத்து அவர் மீடியாக்களை சந்தித்தபோது, இந்த ஊரும் இங்குள்ள மக்களும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அவர்களின் அன்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது . நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும் என்ற மனநிலையுடன் நான் வாழ்ந்து வருகிறேன். ஆனால் சிலர் எனக்கு பின்னாடி யாரோ இருப்பது போலவும், கருப்பு பணத்தை நான் வெள்ளை பணமாக மாற்றி வருவது போலவும் சோசியல் மீடியாவில் கருத்து வெளியிடுகிறார்கள். ஆனால் மூன்று வேளை உணவுக்கே கஷ்டப்பட்ட நான் தற்போது எனக்கு அது கிடைத்திருப்பதால் நம்மால் முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.
பல கஷ்டங்கள், அடி, வலி என பலவற்றை கடந்துதான் நான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். அதோடு எனக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் தோள் கொடுத்து வருகிறார். அதனால் தான் இன்னும் நிறைய பேருக்கு என்னால் உதவி செய்ய முடிகிறது என்றும் தெரிவித்திருக்கிறார் நடிகர் பாலா.




