அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. திரைப்படங்களிலும் நடித்து வரும் அவர் ஏழைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். இந்த நிலையில் ஆண்டிபட்டியில் நடைபெற்ற ஒரு கல்லூரி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பாலா, பல முன்னணி நடிகர்கள் குரலில் மிமிக்ரி பேசியதோடு, பாடலுக்கு நடனமாடியும் மாணவ மாணவிகளை மகிழ்ச்சி படுத்தியிருக்கிறார்.
அதையடுத்து அவர் மீடியாக்களை சந்தித்தபோது, இந்த ஊரும் இங்குள்ள மக்களும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அவர்களின் அன்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது . நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும் என்ற மனநிலையுடன் நான் வாழ்ந்து வருகிறேன். ஆனால் சிலர் எனக்கு பின்னாடி யாரோ இருப்பது போலவும், கருப்பு பணத்தை நான் வெள்ளை பணமாக மாற்றி வருவது போலவும் சோசியல் மீடியாவில் கருத்து வெளியிடுகிறார்கள். ஆனால் மூன்று வேளை உணவுக்கே கஷ்டப்பட்ட நான் தற்போது எனக்கு அது கிடைத்திருப்பதால் நம்மால் முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.
பல கஷ்டங்கள், அடி, வலி என பலவற்றை கடந்துதான் நான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். அதோடு எனக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் தோள் கொடுத்து வருகிறார். அதனால் தான் இன்னும் நிறைய பேருக்கு என்னால் உதவி செய்ய முடிகிறது என்றும் தெரிவித்திருக்கிறார் நடிகர் பாலா.