சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படம் துவக்கம் | விஜய் 69 : புரட்சிகரமான அரசியல் படமாம் | மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஜோடியாக ஆத்மிகா | ‛கேப்டன்' பாடல், போஸ்டருக்கெல்லாம் காப்புரிமை கேட்க மாட்டோம் : பிரேமலதா | திருப்பதி ‛லட்டு' பற்றிய கேள்வி : ‛நோ கமென்ட்ஸ்' என்ற ரஜினி | ஜூனியர் என்டிஆர் ரசிகர்களை எச்சரித்த வேதிகா | 'மெய்யழகன்' நீளம் குறைக்கப்படுமா? - பிடிவாதம் பிடிக்கும் பிரேம்குமார் | என்கவுன்டர் அதிகாரியின் இன்னொரு பக்கம் : வேட்டையன் குறித்து பேசிய ஞானவேல் | இயக்குனர் சுகுமாருக்கு எல்லா விஷயமும் தெரியும் : ஜானி மாஸ்டர் வாக்குமூலம் | ஒரு வார இடைவெளியில் வெளியாகும் பஹத் பாசிலின் 2 படங்கள் |
தரணி இயக்கத்தில், விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் 2004ல் வெளிவந்த 'கில்லி' படம், ரீ-ரிலீஸாக கடந்த மாதம் வெளியானது. வெளியான நாளிலிருந்தே இப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு கிடைத்தது.
அந்தக் காலத்தில் படம் வெளியான போது குழந்தையாக இருந்த விஜய் ரசிகர்கள் இப்போது படத்தை தியேட்டர்களில் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தார்கள். 25 நாட்களைக் கடந்தும் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் நல்ல வசூலையும் குவித்துள்ளது.
25 நாட்களில் மொத்தமாக 30 கோடி வசூலை அள்ளியுள்ளது. தமிழகத்தில் சுமார் 20 கோடி, மற்ற இடங்களில் 10 கோடி என 30 கோடி வசூலைக் கடந்துள்ளது. இதில் படத்தின் தயாரிப்பாளருக்கு சென்றதை விட தியேட்டர்காரர்களுக்கு சென்ற பங்குதான் அதிகம். சுமார் 70 சதவீதத் தொகை தியேட்டர்காரர்களுக்கு, 30 சதவீதத் தொகைதான் தயாரிப்பாளருக்கு என்கிறார்கள்.
எது எப்படியோ, டிவியில் பல முறை ஒளிபரப்பான ஒரு படம் ரீ-ரிலீஸில் இத்தனை நாட்கள் ஓடி, இவ்வளவு வசூலித்தது சாதனைதான்.