'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடித்த 'கில்லி' படம் சில தினங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் ஆனது. முதல் நாளிலேயே சுமார் 8 கோடி வரை வசூலித்து சாதனை புரிந்துள்ளது. தமிழ், தெலுங்கில் இதுவரை ரீ-ரிலீஸ் ஆன படங்களில் முதல் நாள் வசூலில் அதிகம் வசூலித்துள்ளது 'கில்லி' படம் தானாம்.
இப்படத்தை தரணி இயக்கியிருந்தார். 'கில்லி' படத்திற்கு முன்பாக “எதிரும் புதிரும், தில், தூள்” ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் விக்ரம் நடித்த 'தில், தூள்' இரண்டுமே சூப்பர் ஹிட் படங்கள். நான்காவதாக அவர் இயக்கிய 'கில்லி' படமும் சூப்பர் ஹிட் படம். அடுத்து தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த 'பங்காரம்' படத்தை இயக்கினார். அந்தப்படம் வெற்றி பெறவில்லை. அதற்கடுத்து தமிழில் அவர் இயக்கி விஜய் நடித்த 'குருவி', சிம்பு நடித்த 'ஒஸ்தி' ஆகிய படங்களும் வெற்றிகரமாக ஓடவில்லை.
கடந்த 13 ஆண்டுகளாக எந்தப் படத்தையும் அவர் இயக்கவில்லை. 'கில்லி' படத்தின் ரீ-ரிலீஸுக்குப் பிறகு பல யு டியுப் சேனல்களும் அவரைப் பேட்டி எடுக்க பரபரப்பாகி வருகிறார்கள். இந்நிலையில் ரசிகர்களுடன் படத்தைப் பார்த்து ரசித்துள்ளார் இயக்குனர் தரணி. அவருடன் படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்த ஜானகி சபேஷ் அந்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். தரணி எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
'கில்லி' ரிரிலீஸுக்குப் பிறகு தரணிக்கு மீண்டும் படம் இயக்கும் வாய்ப்புகள் வரலாம்.




