ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஆதித்யா சேனலில் பல காமெடி நிகழ்ச்சிகளை வழங்கி வருபவர் கதிர். சின்னத்திரையில் பெருவாரியான நேயர்களை கவர்ந்த எனக்கு சினிமாவிலும் பெரிய காமெடியனாகி ரசிகர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே எனது ஆசை. அதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டிருக்கிறேன் என்கிறார் கதிர்.
இதுகுறித்து கதிர் மேலும் கூறுகையில், தற்போது ஆதித்யா சேனலில் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். அதன்காரணமாக பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோரை கவர்ந்துள்ளேன். குறிப்பாக எனது காமெடி நிகழ்ச்சிகளில் சிரிக்க வைப்பது மட்டுமின்றி சிந்திக்க வைப்பது போன்ற விசயங்களையும் வெளிப்படுத்தி வருகிறேன். சில சமயங்களில் சமூக கருத்துக்களையும் காமெடியில் கலந்து வருகிறேன்.
அதேபோல்தான் சினிமாவிலும் சிரிக்க வைப்பது மட்டுமின்றி அவ்வப்போது கருத்து சொல்லும் காமெடிகளையும் செய்ய ஆசைப்படுகிறேன். அதற்கான சந்தர்ப்பம் சூழல் தான் அமைய வேண்டும். அது டைரக்டர்களின் கையில் இருக்கிறது. தற்போது மதுரவீரன், விதிமதி, வீரா உள்பட பல படங்களில் நடிக்கிறேன்.
சில படங்களில் மற்ற காமெடியன்களுடன் இணைந்து நடித்தபோதும், ஓரிரு படங்களில் தனிக்காமெடியனாகவும் நடிக்கிறேன். முடிந்தவரை இந்த படங்கள் மூலம் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து விட வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். அதேசமயம், சினிமாவில் பிசியாக விட்டதால் சின்னத்திரையை மறந்து விட மாட்டேன். என்னை ஒரு நடிகனாக வளர்த்து ஆளாக்கியது சின்னத்திரைதான். அதனால், எப்போதுமே சினிமா-சின்னத்திரை என இரட்டை குதிரையில் நான் சவாரி செய்வேன் என்கிறார் கதிர்.