ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
திரைப்படங்களில் தான் ஆபாசம் என்றால் இப்போது சின்னத்திரையிலும் தொடர ஆரம்பித்துவிட்டது. சோனி தொலைக்காட்சியில் பெஹ்ரிதார் பியா கி என்ற தொடர் கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து ஒளிபரப்பாக தொடங்கியது. இது ஒரு ஜமீன் குடும்பத்து கதை. ஆரம்பத்தில் நன்றாக கலகலப்பாகத்தான் போய்கொண்டிருந்து. ஆனால் கடந்த சில வாரங்களாக கதை வில்லங்கமானது.
ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு, இன்னொரு ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணுக்கு காதல் வருகிறது. சிறுவன் பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக பெண் குடும்பத்து ஜமீன், காதலுக்கு உதவி செய்கிறது. ஒரு கட்டத்தில் ரகசியமாக திருமணமும் செய்து வைத்து விடுகிறது. இருவரும் இணைந்து குடும்பம் நடத்தவும் ஆரம்பிக்கிறார்கள். இப்படிப் போனது கதை.
இந்த கதை பற்றி பேஸ்புக், டுவிட்டரில் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து கிழித்து தொங்கவிட்டார்கள். உஷாரான சேனல் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தொடரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பியது. அதன் பிறகும் எதிர்ப்பு கடுமையானது. சில தன்னார்வ அமைப்புகள் வழக்கு போட்டு சீரியலை நிறுத்த முடிவு செய்தது. இதனால் சேனல் தற்போது தொடர் ஒளிபரப்பை நிறுத்திவிட்டது. இதன் மூலம் சின்னத்திரை சீரியல்களுக்கும் தணிக்கை வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.